இலங்கை ஊடகவியலாளர்களுக்கு இந்தோனேசியாவில் புலமைப் பரிசில்கள்

இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையில் வெகுஜன ஊடகத்துறையில் தொடர்புகளை மேற்கொள்வதற்கு இரு நாட்டு வெகுஜன ஊடக அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர்.

இலங்கை ஊடகவியலாளர்களுக்கும் ஊடகத்துறை கற்கை நெறியை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தோனேசியாவில், சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அந் நாட்டு தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் ஜோனி ஜி ப்லெட்டி உள்ளிட்ட ஊடகத்துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை மூலம் ஊடகத்துறை சார்ந்த பல பயனுள்ள உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.