சென்னையில் விரைவில் 2-வது விமான நிலையம்: மத்திய அமைச்சர் தகவல்

நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களுக்கு 2-வது விமான நிலையம் தேவை என்பதை கருத்தில் கொண்டு சென்னையில் 2-வது விமான நிலையத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.

மேலும், ரூ.38,000 கோடி செலவில் டெல்லிக்கு அருகே இரண்டாவது விமான நிலையத்தை ஜிவாரில் கட்டி வருவதாகவும், அதேபோல் மும்பையில் இரண்டாவது விமான நிலையம் நவி மும்பையில் ரூ.17,000 கோடி செலவில் கட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னைக்கும் 2-வது விமான நிலையத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்காக 4 இடங்களை மாநில அரசு விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்த அவர், மாநில அரசு தேர்வு செய்த அந்த 4 தளங்களிலிருந்து நாங்கள் 2 தளங்களைத் தேர்ந்தெடுத்து மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.