தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கொளுத்தும் வெயில்.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தை விட வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பலர் சாலையோர இளநீர் கடைகள் பழச்சாறு கடைகளை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.