முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்

புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். 
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு தி.மு.க. எம்.பி.க்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டெல்லியில் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, நீட், மேகதாது அணை, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளார்.
மேலும், டெல்லியில் ஏப்ரல் 2-ம் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கிறார்.
தொடர்ந்து, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
ஏப்ரல் 2-ம் தேதி தி.மு.க. அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். விழாவை முடித்துக் கொண்டு அன்று இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.