சிபிஐ, காவல்துறையினர் மக்களிடம் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் – நீதிபதி என்.வி.ரமணா

அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் சிபிஐ மற்றும் காவல்துறையினர் சமூகத்தில் சட்டப்பூர்வமான அதிகாரத்தையும் மக்கள் நம்பிக்கையையும் திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் சிபிஐ அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய தலைமை நீதிபதி, காவல்துறையினர் சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது  காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்தார்.

மக்களுக்குப் பிரச்சினை ஏற்படும் போதும், இடரான காலங்களிலும் காவல்நிலையங்களுக்கு செல்ல தயங்குவதாக கூறினார்.  லஞ்சம் ஊழல்,  அதிகார துஷ்பிரயோகம், நடு நிலை தவறுதல், மற்றும் அரசியல் பின்னணியில் போலீசார் இருப்பதால் மக்களின் நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தலைமை நீதிபதி விமர்சித்தார்..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.