#மதுரை || பள்ளி மாணவர்களுடன் அரசுப்பள்ளி பெண் ஆசிரியை உல்லாசம்.! வெளியான ஆபாச வீடியோக்கள்.!

மதுரையை சேர்ந்த பெண்ணொருவர் மூன்று மாணவர்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகர காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாநகர காவல் துறையின் போலீஸ் கமிஷனர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்த பள்ளி மாணவர் செல்போனிற்கு வந்துள்ளதை போலீசார்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மாணவனை போலீசார் விசாரித்த போது, அந்த வீடியோவை அவரது மாமா வீரமணி (வயது 39) அனுப்பியதாக தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் தனக்கன் குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்த வீரமணியை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வீடியோவை தான் எடுத்ததாக தெரிவித்தார்.

மேலும், இந்த விசாரணையின் போது வீரமணிக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ரயிலில் சென்னைக்கு சென்றபோது ‌ அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் 45 வயது பெண் ஒருவர் அறிமுகமாகி உள்ளார்.

பின்னர் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டிருந்தனர். இதன்மூலம் இவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

பலமுறை வீரமணி ஆசிரியரின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். ஆசிரியரின் கணவருக்கு இவர்களின் கள்ளத் தொடர்பு குறித்து தெரியவரும் போது அவர் ஆசிரியையை பிரிந்து சென்றுவிட்டார். பிறகு கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் தனது மகனுடன் ஆசிரியை தனியாக வசித்து வந்தார். அப்போது வீரமணி உடன் தொடர்பு கொள்வதை அதிகரித்துக் கொண்டார்.

ஆசிரியை தனது வீட்டில் ஏராளமான மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். அதில் பள்ளி மாணவர் 2 பேரையும்  கல்லூரி மாணவர் ஒருவரையும் வீட்டிற்கு வர வைத்து உல்லாசம் அனுபவித்த படி இருந்திருக்கிறார்.

மேலும், இதனை தனது கள்ளக்காதலன் வீரமணி மூலம் வீடியோ எடுக்க செய்து அதனை அடிக்கடி பார்த்து ரசித்தபடி இருந்துள்ளார்.

போலீசார் மாணவர்களுடன் ஆசிரியை உல்லாசமாக இருந்த வீடியோவை பரப்பிய வீரமணி மற்றும் ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர். ஆசிரியரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

மேலும், அந்த ஆசிரியை பயன்படுத்திய செல்போன்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதில் 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தன.

மேலும், அவரிடம் டியூஷன் படித்த பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்துகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.