10 மாநிலங்களில் 258 ஊரக நீதிமன்றங்கள்| Dinamalar

புதுடில்லி: லோக்சபாவில், சட்டத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் கூறியதாவது: கடந்த 2008ல் கிராம நீதிமன்ற சட்டம் அமலுக்கு வந்தபின், 15 மாநிலங்கள் மட்டுமே ஊரக நீதிமன்றங்களை அமைக்க ஆர்வம் காட்டின. இதில், 10 மாநிலங்கள் மட்டுமே ஊரக நீதிமன்றங்களை அமைத்துள்ளன. இப்போது வரை, இந்த 10 மாநிலங்களிலும் 258 ஊரக நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. மேலும் 476 நீதிமன்றங்கள் அமைக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.