ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டம்- மகாராஷ்டிராவில் 3 பேர் கைது

புனே:
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிம்ப்ரி சின்ச்வாட் தொழில்துறை நகரின் காலவாடி பகுதியில் போலீசார் நடத்திய சோதனையின்போது அவர்கள்  பிடிபட்டனர். 
விசாரணையில் அவர்கள், நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் மீது பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.27.25 லட்சம் பணம், 8 செல்போன்கள் மற்றும் பிற சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 
குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடிய இந்த போட்டி புனே அருகே கஹுஞ்சே கிராமத்தில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.