நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவர் கைது

பெங்களூரு : நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் போல் சந்த் ஊரவ், 40. இவரது மனைவி சஞ்ஜி ஊரவ், 36. இவர்கள் இருவரும் பெங்களூரில் பிசுராய் என்ற குத்தகைதாரரிடம் விதான் சவுதா அருகே கட்டட வேலை செய்து வந்தனர்.

இதற்காக விதான் சவுதா அருகே கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர்.இவர்களுடன் மேலும் சிலர் தங்கி இருந்து வேலை செய்தனர். தொழிலாளர்களுக்கு சமையல் செய்யும் வேலையையும் சஞ்ஜி செய்து வந்தார். இவருக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.கடந்த மாதம் 26ல், கூடாரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மனைவி இறந்து கிடந்தார். அவரது முகத்தில் காயங்கள் இருந்தது. கணவர் தலைமறைவாகி விட்டார். குத்தகைதாரர் கொடுத்த புகாரின் பேரில், விதான் சவுதா போலீசார், கணவரை தேடி வந்தனர்.கூடாரத்துக்கு அவர் நேற்று வந்த போது, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்ததில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.