ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை புதுச்சேரியில் சிகிச்சை முகாம்| Dinamalar

புதுச்சேரி : கேரளா மாநிலம் கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையின் நடமாடும் கண்சிகிச்சை முகாம் புதுச்சேரியில் ஏப்.7 ல் நடக்க உள்ளது.

இம்மருத்துவமனை கண் பரிசோதனை, சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து வசதிகளும் கொண்ட பஸ் ஒன்றை வடிவமைத்துள்ளது. கேரளாவிற்கு செல்ல சிரமப்படும் நோயாளிகளுக்காக இந்த நடமாடும் மருத்துவமனை புதுச்சேரிக்கு வருகிறது. ஏப். 7 காலை 9:00 முதல் மாலை 5:00 வரை புதுச்சேரி கோர்ட் எதிரே( கடலுார் ரோடு) ஏ.எப்.டி. மைதானத்தில் கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடக்கிறது. சிகிச்சை பெற முன்பதிவு அவசியம்.முன்பதிவிற்கு 0485- 225 3007ல் தொடர்பு கொள்ள வேண்டும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.