இளையராஜா தொடர்ந்த வழக்கு… !நீதிபதிகள் உத்தரவு…!

இந்தியன் ரெக்கார்டு கம்பெனி, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் தனது பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இசையமைப்பாளர்
இளையராஜா
தொடர்ந்துள்ள மேல்முறையீடு வழக்கில் சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து, 1978 -80 ஆண்டுகளில் வெளியான, 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு, 3 கன்னட, 2 மலையாளம் என மொத்தம் 30 படங்களின் இசை பணிகளை, பட தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றுள்ளதால், இந்த படங்களின் இசையை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை கோரி இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

நினைத்ததை செய்து காட்டும் சிவகார்த்திகேயன்..இதெல்லாம் பெரிய விஷயம்பா..!

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி
ஜெயசந்திரன்
, இந்த 30 படங்களின்
இசை இந்தியன் ரெக்கார்டு
கம்பெனிக்கு சொந்தமானவை என கூறி, அவற்றை பயன்படுத்த இளையராஜா மற்றும் இரு
மியூசிக்
நிறுவனங்களுக்கு தடை விதித்து கடந்த 2020 ஆண்டு பிப்ரவரியில் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில்சென்னை உயர் நீதிமன்றத்தில்
மேல் முறையீடு
மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், பட தயாரிப்பாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி கம்பெனிக்கு சாதகமான உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும், பட தயாரிப்பாளர்களுக்கு படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளதாகவும், இசை பணிகளுக்கு அவர்கள் முதல் உரிமையாளர்கள் அல்ல எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம்
வர்த்தகம்
சம்பந்தப்பட்டது என்பதால் அது சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு தான் விசாரிக்க வேண்டும் எனவும், தனி நீதிபதியின் உத்தரவு அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டது எனவும் மனுவில் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் இளையராஜா தரப்பில் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவைஉயர்நீதிமன்ற
நீதிபதிகள்
துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,1980 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான பிறகும் தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும் இதற்கு உரிய காப்புரிமை பெறவில்லைஎன்று குறிப்பிட்டார்.

மேலும் 1996 க்கு பிறகுதான் டிஜிட்டல் உரிமை குறித்த பேசப்பட்டு, 2012 புது சட்ட திருத்தங்கள் வந்ததாகவும், தனி நீதிபதி, டிஜிட்டல் உரிமை குறித்த சட்ட திருத்தந்தை கருத்தில் கொள்ளவில்லை எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.மனுதரார் தரப்பு வாதங்களுக்கு பிறகு மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க இந்தியன் ரெக்கார்டு கம்பெனி உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை தள்ளிவைத்தனர்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

அடுத்த செய்திDhanush:தனுஷின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு பின்னால் இப்படி ஒரு பஞ்சாயத்தா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.