விருதுநகர்: கண்களில் மிளகாய்பொடி தூவி கொலை செய்யப்பட்ட வி.சி.க முன்னாள் நிர்வாகி – நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுரு. இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காரியாபட்டி ஒன்றியத்தின் முன்னாள் துணைச் செயலாளராக இருந்தவர்.  இவர், குரண்டி கண்மாய் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள முட்புதரில் மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரது கண்களில் மிளகாய்ப்பொடியை தூவினர். அப்போது நிலைகுலைந்த அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில், முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்த விஜயகுரு

வீட்டிலிருந்து கிளம்பிய விஜயகுரு, நீண்டநேரம் ஆகியும் அவரை காணவில்லை என பல இடங்களிலும் தேடினர். இறுதியில் கண்மாய் பகுதிக்கு சென்ற நிலையில்தான் விஜயகுரு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.  தகவலறிந்த ஆவியூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குரண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வந்த சமூக விரோத செயல்கள் குறித்து அவ்வப்போது காவல்துறைக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வைத்ததாக கூறப்படுகிறது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், “ , கடந்த ஏப்ரல் 28-ம் தேதி விஜயகுருவின் உறவினரான சக்திவேல் என்பவர்,  சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.  இந்த உயிரிழப்புக்கு விஜயகுரு தான் காரணம் என சந்தேகித்து சக்திவேலின் உறவினர்கள் அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  இருப்பினும், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடைபெற்றதா?

போலீஸார் விசாரணை

அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, உயிரிழந்த விஜயகுருவின் வீட்டின் அருகே மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் கஞ்சா போதை ஆசாமிகள் கொடூரத் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது விஜயகுரு கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் குரண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.