வயலில் இறங்கி வெறித்தனமாய் வேலை செய்யும் பிரபல இயக்குநர்… தீயாய் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் தங்கர் பச்சான். அழகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான
தங்கர் பச்சான்
, தொடர்ந்து, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம் , ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் என பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது தனது மகனை வைத்து தக்கு முக்கு திக்கு தாளம் என்ற படத்தை இயக்கி வருகிறார். விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்ட இயக்குநர் தங்கர் பச்சான், அடிக்கடி விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். தனது சொந்த ஊரான பண்ரூட்டி அருகே உள்ள பதிராகோட்டையில் விவசாயமும் செய்து வருகிறார்.

தானே வயலில் இறங்கி வேலை செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் தங்கர் பச்சான். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் தனது நிலத்தில் விவசாய செய்துள்ள வேர்க்கடலை செடிகளை தொழிலாளிகளுடன் சேர்ந்து அறுவடை செய்கிறார்.

Dhanush: பொறுமையிழந்த தனுஷ்… ‘அந்த’ விஷயத்தை நினைத்து உதறலில் ரஜினி குடும்பம்!

மேலும் அந்த வேர் கடலையின் ஸ்பெஷல் குறித்தும் பேசியப்படியே வேலை செய்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள தங்கர் பச்சான், விவசாயிகளின் சிக்கல்களை உணராமல் கண்டுகொள்ளாமல் காலம் முழுதும் உண்டு கொழுத்து வாழ்பவர்கள் அனைவரையும் மாதத்தில் ஒருநாள் விவசாயப் பணிகளில் கட்டாயம் ஈடுபடுத்த வேண்டும். அப்பொழுதாவது, கொளுத்தும் வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் உழைத்து கடனாளியாகவே செத்து மடிபவர்கள் தங்களுக்காக உணவை உற்பத்தி செய்ய எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும்!! என்றும் குறிப்பிட்டுள்ளார்.

BEAST TEASER : ‘வெயிட்டு காட்டிரலாமா’ மாஸ் காட்டும் சன் பிக்ச்சர்ஸ்

அடுத்த செய்திஅந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்கேன் …! ரசிகரிடம் கூறிய பிரபல நடிகை…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.