ஏப்ரல் 9ல் சென்னை மாநகராட்சியின் 2022-23ம் நிதி நிலை அறிக்கை

சென்னை:
ப்ரல் 9ல் சென்னை மாநகராட்சியின் 2022-23ம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்னை மாநகராட்சி மேயராக இளம் பட்டதாரி பெண் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்முறையாக, சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தலித் பெண் மேயர் இவராவார். மேயராக தேர்வு செய்யப்பட்டது முதலே பிரியா பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார்.
வரும் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஏப்ரல் 9ல் சென்னை மாநகராட்சியின் 2022-23ம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆண்டுகளாக தனி அதிகாரி பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், இந்த ஆண்டு மேயர் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.