குண்டர் சட்டத்தில் கைதான பப்ஜி மதனுக்கு தேவைப்பட்டால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ள பப்ஜி மதனுக்கு தேவைப்பட்டால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இது ஒரு சாதாரண வழக்கு; இதற்காக மதன் 9 மாதங்களாக சிறையில் இருக்கிறார் என மதன் தரப்பு தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.          

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.