China Cyber Attack: இந்திய மின் நிலையங்களை கண்காணிக்கிறதா சீனா? அதிகரிக்கும் கவலை

புதுடெல்லி: லடாக் அருகே இந்திய பவர் கிரிட் அமைப்பில் சீனா ஆதரவு ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.

சமீபத்திய மாதங்களில் லடாக் அருகே உள்ள இந்திய பவர் கிரிட் அமைப்பை சீனா ஆதரவு அரசு ஹேக்கர்கள் தாக்கி வருவதாக கூறும் புலனாய்வு தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.  

புதனன்று (2022, ஏப்ரல் 7) Recorded Future வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்கள் இந்தியாவிற்கு எதிரான சீனாவின் இணைய உளவுப் போரின் ஒரு பகுதியாகும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

லடாக்கில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள  “லோட் டிஸ்பாட்ச்” மையங்களில் குறைந்தது ஏழு மையங்களை சீனா பல மாதங்களாக கண்காணித்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

அதையடுத்து, லடாக் அருகே மின்சார விநியோக மையங்களை குறிவைத்து சீன ஹேக்கர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாக மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் வியாழக்கிழமை (2022, ஏப்ரல் 7) தெரிவித்தார்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் மின்சார விநியோகத்தை குறிவைத்து ஹேக்கர்கள் இரண்டு முறை சைபர் தாக்குதலுக்கு முயற்சித்தனர் என்று அமைச்சர் ஒப்புக் கொண்டார்.

 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் லடாக்கிற்கு அருகிலுள்ள மின் கட்டத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஊடக அறிக்கைகளுக்கு பதிலளித்த சிங், “லடாக்கிற்கு அருகிலுள்ள மின்சார விநியோக மையங்களை குறிவைக்க சீன ஹேக்கர்களால் இரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவை வெற்றிபெறவில்லை …” என்றார்.

சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள பாதுகாப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்தியாவின் மிகப்பெரிய சோகத்திற்கு இந்திய ராணுவத்தை கேலி செய்யும் சீனா

Recorded Future வெளியிட்ட அறிக்கையில், “சமீபத்திய மாதங்களில், இந்த மாநிலங்களுக்குள் கட்டக் கட்டுப்பாடு மற்றும் மின்சாரம் அனுப்புவதற்கான நிகழ்நேர செயல்பாடுகளை மேற்கொள்வதற்குப் பொறுப்பான குறைந்தது ஏழு இந்திய ஸ்டேட் லோட் டெஸ்பாட்ச் சென்டர்களை (SLDCs) இலக்காகக் கொண்ட நெட்வொர்க் ஊடுருவல்களை நாங்கள் கண்டறிந்தோம். அதிலும் குறிப்பிடத்தக்க வகையில், லடாக்கில் சர்ச்சைக்குரிய இந்தியா-சீனா எல்லைக்கு அருகாமையில், வட இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட SLDCகளுடன், புவியியல் ரீதியாக இந்த இலக்கு குறிவைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

ஹேக்கிங் குழுக்களில் ஒன்றான RedEcho, முன்பு சுமை அனுப்பும் மையங்களில் ஒன்றை குறிவைத்து, சீன அரசாங்கத்துடன் அமெரிக்கா பிணைத்துள்ள ஹேக்கிங் குழுவுடன் “தகவல்களை” பகிர்ந்து கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சீன அரசின் ஆதரவு பெற்ற குழுக்கள் இந்திய பவர் கிரிட் சொத்துக்களை நீண்டகாலமாக குறிவைப்பது என்பது, வரையறுக்கப்பட்ட பொருளாதார உளவு அல்லது வழக்கமான உளவுத்துறை சேகரிக்கும் விஷயமாக பார்க்கபப்டுகிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் படிக்க | ரஷ்யா உங்கள் பாதுகாப்புக்கு வராது..இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

“இது முக்கியமான உள்கட்டமைப்பைச் சுற்றியுள்ள தகவல் சேகரிப்பு மற்றும்/அல்லது எதிர்காலச் செயல்பாட்டிற்கான முன்-நிலைப்படுத்தலைச் செயல்படுத்துவதற்கு உதவியாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.”

சைபர் போரை நடத்தும் சீன அரசாங்கத்தின் திறன் குறித்து இந்திய அரசுக்கு கவலைகள் உள்ளன.

இந்த சூழ்நிலையில், மறைந்த முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் மறைந்த பிபின் ராவத் சொன்ன கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தொழில்நுட்பம் தொடர்பாக நாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளைச் சுட்டிக் காட்டிய அதே வேளையில், இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.    

பிபின்

 

“இந்தியா மீது சைபர் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டது சீனா, அது நமது அமைப்புகளில் பெரிய அளவில் சீர்குலைக்கும் என்பதும் அரசுக்குத் தெரியும்.  எனவே, இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு அமைப்பை உருவாக்குவது முக்கியமானது” என்று அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கூறினார்.

சைபர் தாக்குதல்களைச் சமாளிக்க ஃபயர்வால்களை உருவாக்குவதே இந்திய அரசின் நோக்கம் என்றும், “தீவிரமான முறையில்” சைபர் தாக்குதல்கள் தீர்க்கப்பட்டு வருவதாகவும் பிபின் ராவத் தெரிவித்திருந்தார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.

மேலும் படிக்க | சீன விமானப்படையின் தந்திரோபாய உத்தி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.