உ.பி.யில் இடமாற்றம் கேட்ட மின்வாரிய ஊழியரிடம் ஒரு இரவுக்கு மனைவியை அனுப்ப சொன்ன அதிகாரி: விரக்தியில் தற்கொலை

லக்கிம்பூர்கேரி: உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லியா உதவி மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தில் லைன் மேன் ஆக வேலை பார்த்தவர் கோகுல் (42). சில நாட்களுக்கு முன் இவரை அலிகன்ஜ் பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். இதையடுத்து தனக்கு வேறு பகுதியில் இடமாற்றம் கோரி இளநிலை பொறியாளர்  நாகேந்திர சர்மாவிடம் கோகுல் கேட்டுள்ளார். அதற்கு இளநிலை பொறியாளர் சர்மா, ‘நீ விரும்பிய  இடத்துக்கு மாற்ற வேண்டுமானால் 1லட்சம் தரவேண்டும். மேலும் உன்னுடைய மனைவியை என்னுடயை வீட்டுக்கு ஒரு நாள் இரவு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளார். அப்போது இன்னொரு ஊழியர் ஜெகத்பாலும் இருந்துள்ளார். இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இளநிலை பொறியாளர் சர்மா வீட்டுக்கு கோகுல் சென்றார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோகுல் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சர்மா,ஜெகத்பால் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.