ரசாயன தொழிற்சாலையில் தீ 6 பேர் கருகி பரிதாப பலி

அகமதாபாத்: குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலியானார்கள். குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று அதிகாலை வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென ரியாக்டர் வெடித்து சிதறியதால், அந்த பிரிவு  தீப்பிடித்து எரிந்தது. அப்போது, அருகில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் தீயில் சிக்கி அலறி கூச்சலிட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல பணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் 6 ஊழியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.