நல்லிணக்கம் இல்லை மாஜி அமைச்சர் கோபம்| Dinamalar

தட்சிண கன்னடா : ”கர்நாடகாவில் அமைதி, நல்லிணக்கம் சீர்குலைக்கப்படுகிறது,” என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் காதர் தெரிவித்தார்.மங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் மனப்பான்மை கொண்டவர்களை கட்டுப்படுத்த தவறிய முதல்வரும், அவரது நிர்வாகமும் குண்டர்களின் கையில் நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு மவுனம் சாதித்து வருகின்றனர்.

வகுப்புவாத அடிப்படையில் மாநிலத்தில் பல்வேறு வகையான செயல்பாடுகள் நடந்து வருகின்றன. மாநிலத்தில் 95 சதவீதம் மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால், மோசமான மனநிலை கொண்ட சிலரால் சீர்குலைக்கப்படுகிறது.வகுப்புவாத சக்திகளை முதல்வர் தடுக்க வேண்டும். வகுப்புவாதத்தால் மக்கள் பொறுமை இழக்கக்கூடாது. இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.