அண்ணியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் உலக நாடுகளுக்கு தர வேண்டிய 51 பில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்த வாய்ப்பில்லை – இலங்கை அரசு

இலங்கையில் அண்ணியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் உலக நாடுகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய 51 பில்லியன் டாலர் கடனை உடனடியாக செலுத்த முடியாது என அரசு கைவிரித்தது.

கடும் பொருளாதார் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் இலங்கை கடைசி வாய்ப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தையே நம்பி இருக்கிறது. அதற்காக நாண நிதியத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் கடந்த வாரம் வங்கிக் கொள்கைகளில் கடன் திட்டங்களுக்கான வரியை அரசு மாற்றியமைத்தது.

வெளிநாடுகளிடம் இருந்து பெறப்பட்ட வர்த்தக கடன்கள் இலங்கையின் ஒட்டுமொத்த கடனில் பெரும்பகுதியை பகுதியை கைப்பற்றி உள்ளதாகவும், நாட்டை வழிநடத்த அரசிடம் பணம் இல்லை என எதிர்கட்சி எம்.பி. ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார். வரும் 19ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டதில் இதுகுறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளதாக தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.