நியூயார்க்கில் சீக்கியர்கள் மீது தாக்குதல்- ஒருவர் கைது

நியூயார்க் ரிச்மண்ட் ஹில் பகுதியில் அதிகாலை 2 சீக்கியர்கள் நடைபயிற்சி சென்றபோது அவர்களை மர்ம நபர்கள் கம்பால் தாக்கினர். பின்னர் தலையில் கட்டப்பட்டிருந்த டர்பனை அவிழ்த்துவிட்டு தப்பி ஓடினர்.

இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய துணை தூதரகம், சீக்கியர்கள் மீதான தாக்குதலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு நியூயார்க் அட்டர்னி ஜெனரல் வெட்டிசியா ஜேம்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூயார்க் ரிச்மண்ட் ஹில் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 72 வயதான சீக்கியர் நிர்மல்சிங் என்பவர் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்..
தென் ஆப்பிரிக்கா வெள்ளத்தில் சிக்கி 45 பேர் பலி – 70 ஆண்டுகால இந்து கோயில் சேதம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.