சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆளுநர் ரவி தரிசனம்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ரவி சுவாமி தரிசனம் செய்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 84-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் வருகை தந்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கிய ஆளுநர், நேற்று காலை நடராஜர் கோயிலுக்கு மனைவியுடன் சென்றார். அவர்களை கோயில் பொதுதீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை ஆளுநரும், அவரது மனைவியும் தரிசனம்செய்தனர். தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்து சால்வை, மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.