டோல்கேட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டி அத்துமீறல்.. தென்காசியைச் சேர்ந்த 3 பேர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவப்பு நிற மஹிந்திரா பொலிரோ வாகனத்தில் வந்த நபர்கள், கட்டணம் செலுத்த முடியாது என கூறி டோல்கேட் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது, காரில் இருந்த நபர் கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து மிரட்டியதுடன் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து டோல்கேட் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீசார், சுங்கச்சாவடி அருகில் வைத்து அவர்களை மடக்கி பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட ஜெயக்குமார்,முத்துக்குமார், பொன்ராஜ் ஆகியோர் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், அவர்களிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி, ஒரு ஏர் கன் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.