2வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை

சென்னை:
ரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்ட விதிகளின்படி பணியிலுள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ள தமிழக அரசு, அவ்வாறு இரண்டாவது திருமணம் செய்வது ஒழுக்கக்கேடானது எனவும் அரசின் மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் எனவும் கூறியுள்ளது. மேலும் அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்வதால் சட்டரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது, இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.