600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி

தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரராக திகழ்கிறார். அவரது வீடு மும்பையின் தென்பகுதியில் இருக்கிறது. அண்டிலியா என்ற அந்த வீடு மும்பையில் அனைவராலும் பார்க்க விரும்பும் ஒரு இடமாக இருக்கிறது. 27 மாடிகள் கொண்ட இந்த அண்டிலியா கட்டிடம் ரூ.15,000 கோடி மதிப்புடையது. இந்த கட்டிடத்தை பராமரிக்கவும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் முகேஷ் அம்பானி ஒவ்வொரு ஆண்டும் பல கோடி செலவு செய்து வருகிறார் . அதோடு ஒவ்வொரு மாதமும் 70 லட்சம் மின் கட்டணமாக செலுத்தப்படுகிறது. இந்த கட்டிடத்தில் சமையல்காரர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என மொத்தம் 600 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அதிகமானோர் அங்கேயே தங்கிக்கொள்ள இடவசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அம்பானி குடும்பம்

அம்பானி குடும்பத்தினர் மிகவும் எளிய உணவையே விரும்பினாலும், அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மிகவும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. அம்பானி குடும்பத்தினர் கேழ்வரகில் தயாரிக்கப்படும் உணவு, சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட பிரெட், குஜராத்தி முறை உணவு மற்றும் சலாட்களையே அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காக தினமும் 4000 சம்பாத்தி தயாரிக்கப்படுகிறது.

இந்த சப்பாத்திகளை தயாரிக்க தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் சமையல் அறையில் நிறுவப்பட்டு இருக்கிறது. அதனை சமையல் கலைநிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் தலைமை சமையல்காரர் ஒரு கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி போன்று செயல்படுகிறார். இங்கு ரொட்டி தயாரிக்கும் ஒரு சமையல்காரருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2 லட்சம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஆண்டிலியாவில் 3 மாடியில் தொங்கும் கார்டன் அமைக்கப்பட்டுள்ளது. 160க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்த ஆறு அடுக்கு கார் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர்களை தரையிறக்கும் தளம் போன்ற வசதியும் இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.