பகலில் நோட்டம் விட்டு  இரவில் திருடியோர் கைது | Dinamalar

சஞ்சய் நகர் : பகலில் நோட்டமிட்டு இரவில் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பெங்களூரு சஞ்சய் நகர் போலீசார், திருட்டு வழக்கில் ரோகித் மண்டல், 35, வினோத் குமார், 33 ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தை சேர்ந்த இவர்கள் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் திருடி வந்தது தெரியவந்தது.இவர்களிடமிருந்து 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், எலக்ட்ரானிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.