சூர்யா எடுத்த அதிரடி முடிவு…எல்லாம் அதன் காரணமாகத்தான்..!

நடிகர்
சூர்யா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். சினிமாவில் தன் உழைப்பால் படிப்படியாக முன்னேறி இன்று இந்த நிலையை அடைந்துள்ளார். தற்போது நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றிநடை போட்டுவருகின்றார் சூர்யா.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படங்களான சூரரைப்போற்று, ஜெய் பீம்,
எதற்கும் துணிந்தவன்
ஆகிய படங்கள் ரசிகர்களின் அமோகவரவேற்பை பெற்றுள்ளது. இதில் எதற்கும் துணிந்தவன் திரையில் வெளியாக
சூரரைப்போற்று
மற்றும்
ஜெய் பீம்
ஆகிய படங்கள் OTT யில் வெளியானது.

கிட்டத்தட்ட உறுதியான தலைவர் 170 ? யாரும் எதிர்பாராத கூட்டணி..!

இந்நிலையில் தற்போது சூர்யா பாலாவின் இயக்கத்தில் நடித்துவருகிறார். பிதாமகன் படத்திற்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து
பாலா
மற்றும் சூர்யா இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து சூர்யா இயக்குனர்
வெற்றிமாறன்
இயக்கத்தில்
வாடிவாசல்
படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் சூர்யா தற்போது சில நாட்கள் ஓய்வு எடுக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

சூர்யா சமீபத்தில் ஏர்போட்டில் இருந்து வரும் புகைப்படம் வெளியானதை அடுத்து ரசிகர்கள் சிலர் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க சென்னை வந்துள்ளதாக பேசி வருகின்றனர். மேலும் சிலர் பாலா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துள்ளதாக கூறுகின்றனர்.இந்நிலையில் இன்னும் சில தினங்களில் வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் வாடிவாசல் படத்தின் இரண்டாம் கட்ட டெஸ்ட் ஷூட் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.