சென்னை:
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த ரெயில், தடம்புரண்டு நடைமேடையில் ஏறி கடைகள் மீது மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீயணைப்பு துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிலர் காயமடைந்திருக்கலாம் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.