வித்யாசமாக ப்ரொபோஸ் செய்த அஜித் ..அசந்துபோன ஷாலினி..!

தமிழ் சினிமாவில் பல நட்சத்திர தம்பதிகள் இருக்கின்றனர். அதில் மிக முக்கியமான தம்பதிகள்
அஜித்
மற்றும்
ஷாலினி
.
காதல் கோட்டை
, காதல் மன்னன்,
வாலி
போன்ற தொடர் வெற்றிகளின் மூலம் அஜித் முன்னணி நடிகராக உயர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் ஷாலினியை முதன் முதலில் சந்தித்தார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஷாலினி பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில் சரண் இயக்கத்தில் அஜித் மற்றும் ஷாலினி இணைந்து நடித்த திரைப்படம் அமர்க்களம். அஜித்தின் 25 ஆவது திரைப்படமான
அமர்க்களம்
மிகப்பெரிய வெற்றியடைந்தது.

நடிகையை திருமணம் செய்துகொள்ளாதே… அஜித்துக்கு அட்வைஸ் செய்த நடிகர்..!

அப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் அஜித்திற்கு நடிகை ஷாலினி மீது காதல் வந்தது. ஆரம்பத்தில் இருவரும் தங்கள் காதலை வெளிகாட்டாமல் பழகி வந்தனர். பிறகு நாளுக்கு நாள் இவர்கள் நெருங்கி பழக ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் இருவரில் காதலை முதலில் வெளிப்படுத்தியது அஜித் தான்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

ஒரு நாள் அமர்க்களம் படப்பிடிப்பின்போது அஜித் இயக்குனர் சரணிடம் சென்று விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடுங்கள் என்றாராம். அதற்கு ஏன் என சரண் கேட்க , அஜித் இப்படப்பிடிப்பை முடிப்பதற்குள் எனக்கு ஷாலினியின் மேல் காதல் வந்துவிடும் போல் உள்ளது அதனால் தான் விரைவில் படப்பிடிப்பை முடிக்குமாறு கேட்டுக்கொண்டேன் என்றாராம்.

இதை பார்த்துக்கொண்டிருந்த ஷாலினி அஜித்திடம் இருவரும் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என கேட்க அதற்கு அஜித், உங்கள் மீது எனக்கு காதல் வருவதற்குள் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க சொன்னேன் என்றார்.

இதை சற்றும் எதிர்பாராத ஷாலினி வெட்கத்தின் மூலம் தன் காதலை வெளிப்படுத்தினாராம். இதைத்தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் 2000 ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

விமலென்ன : விஜய்யா? விஜய்சேதுபதியா? – வெளுத்தெடுத்த தயாரிப்பாளர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.