மகாவீரர் ஜெயந்தி ஊர்வலம்| Dinamalar

மறைமலை நகர் : செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் அமைந்துள்ள ஜைன மத கோவிலில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சமண இயக்க ஊர்வலம் நடத்தப்பட்டது.

இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக ஜி.எஸ்.டி., சாலை வழியாக முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் கோவிலை அடைந்தனர். சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டு தேய்பிறை அஷ்டமி பூஜையும் நடைபெற்றது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.