அயோத்தியா மண்டபம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விசாரணை நடத்தலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அயோத்தியா மண்டபம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை அடிப்படையில் அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியா மண்டப நிர்வாகத்தை கையகப்படுத்திய அறநிலைய உத்தரவை எதிர்த்த மேல் முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்து அறநிலையத்துறை உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யப்போவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.