ராஜஸ்தானில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்- ஒருவர் கைது

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை மர்ம கும்பல் ஒன்று பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பந்தப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஜெய்ப்பூரில் இருந்து தௌசாவுக்குப் பேருந்தில் சென்றார். பேருந்தில் இருந்து இறங்கிய அந்த பெண் வீட்டை நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் லிப்ட் தருவதாக கூறி காரில் ஏற்றி உள்ளனர்.
பின்னர், அந்த பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பெண்ணை கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசிய கும்பல் சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, சோதனைக்குப் பிறகு நேற்று கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. மேற்கொண்டு போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளின் அடிப்படையில் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் அடையாளம் காணப்பட்டதாகவும் தௌசாவின் காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்..
தொடர் மின்வெட்டு பிரச்சினை: ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி கேள்வி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.