26/04/2022: இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு மேலும் 2,483 பேர் பாதிப்பு, 1,399 பேர் பலி

டெல்லி:  இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,483 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 1,399 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில்,  புதிதாக மேலும் 2,483 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,62,569 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி, மேலும்  1,399 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,622ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 1,970 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,23,311 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 15,636 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 22,83,224 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,87,95,76,423 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.