சிவகார்த்திகேயன் எஸ்கேப், சிக்குனது அஜித் தான்: தல பாவம்

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரை வைத்து
விக்னேஷ் சிவன்
இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.

படத்தை பார்த்தவர்கள் விக்னேஷ் சிவனை விளாசிக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு கதைனு படம் பண்ணியிருக்கீங்களே விக்னேஷ் சிவன். உங்களை பார்த்து பாவமாகவும், கோபமாகவும் இருக்கிறது என்கிறார்கள்.

இந்நிலையில்
அஜித்
ரசிகர்களுக்கு வேறு ஒரு கவலை வந்துவிட்டது. அஜித்தின் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

காத்து வாக்குல ரெண்டு காதல் இந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது. அப்படி என்றால் ஏ.கே. 62 கதை எப்படி இருக்குமோ என்பதே அஜித் ரசிகர்களின் பயம்.

முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நண்பர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை பார்த்தவர்களோ, சிவகார்த்திகேயன் ரொம்ப தெளிவு. விக்னேஷ் சிவனை பற்றி தெரிந்து தான் எஸ்கேப் ஆகிவிட்டார். அஜித் பாவம் சிக்கிவிட்டார் என்கிறார்கள்.

அச்சோ, விஜய்க்கு நடந்தது விஜய் சேதுபதிக்கும் நடந்துடுச்சே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.