மலேசியாவில் டுவின் டவரை தாக்குவது போன்று ஏற்பட்ட கண்கவர் மின்னல்!

மலேசியாவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததற்கு மத்தியில் அங்குள்ள டுவின் டவரை தாக்குவது போன்று கண்கவர் மின்னல் தோன்றியுள்ளது. அந்த காட்சி அடங்கிய புகைப்படம் டுவிட்டரில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அது உண்மை நிகழ்வா? அல்லது ஃபோட்டோ ஷாப் செய்யப்பட்டதா? என காண்போரை ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் அந்த புகைப்படம் உள்ளதாக பலரும் கூறியுள்ளனர். மிதவெப்பமண்டல நாடான மலேசியாவில் இது போன்று மின்னல்கள் தாக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வது வழக்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

கேரள மீனவருக்கு அடித்த ஜாக்பாட்…வலையில் சிக்கிய 3 கோல் மீன்கள் ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனை!

கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரை துறைமுகத்தில் மீனவர் வலையில் சிக்கிய 3 கோல் மீன்கள், இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. சக்தி குளங்கரை பகுதியை சேர்ந்த மாணு என்ற மீனவர் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அவரது வலையில் மூன்று பெரிய கோல் மீன்கள் சிக்கியுள்ளன. இந்த வகை மீன்கள் அதிக மருத்துவ குணம் கொண்டவை என்பதால் அதிக விலைக்கு போவது வழக்கம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த மூன்று கோல் மீன்களை வாடிக்கையாளர்கள் போட்டிப்போட்டு கொண்டு … Read more

நான் பாதுகாப்பாக இருப்பேனா? ரஷ்ய ராணுவத்திடம் பிடிபட்ட பிரித்தானிய வீரர் கேள்வி!

ரஷ்ய முன்னெடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரித்தானிய தன்னார்வல வீரர் ஆண்ட்ரூ ஹில் ரஷ்ய படைகளால நேற்று சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 24ம் உக்ரைனில் ரஷ்யா தனது சிறப்பு ராணுவ நடவடிக்கையை தொடங்கிய நிலையில், தற்போது இந்த போரானது 66வது நாளாக இன்றும் நடைப்பெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவதற்காக சென்ற பிரித்தானிய நாட்டை சேர்ந்த தன்னார்வலர் ஆண்ட்ரூ ஹில்(Andrew Hill) என்பவரை ரஷ்ய ராணுவம் சிறைப்பிடித்து அவருடன் ரஷ்ய ராணுவம் … Read more

காலி நிலம் அபகரிப்பு பிரச்சினை: மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் கொலையில் மற்றொரு திமுக பிரமுகர் கைது..!

சென்னை: மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கில், மற்றொரு திமுக பிரமுகர் குட்டி என்கிற உமா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சி பதவி மற்றும் காலி நிலத்தை அபகரிக்க நடைபெற்ற போட்டி காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அடுத்த மடிப்பாக்கத்தில்  திமுகவின் 188வது வட்ட செயலாளராக உள்ள மடிப்பாக்கம் செல்வம் என்பவர் பிப்ரவரி 1ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை … Read more

தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் பலி- ஒரு நபர் குழு விசாரணை தொடங்கியது

தஞ்சாவூர்: தஞ்சை அருகே உள்ள களிமேட்டில் கடந்த 27ந் தேதி நள்ளிரவில் அப்பர்சாமி தேர் திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் தேர் நிலைக்கு வரும்போது தேரின் உச்சிப்பகுதி உயர்அழுத்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் இறந்தனர். பலத்த காயம் அடைந்த 17 பேர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து இறந்தவர்கள் உடலுக்கு மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண நிதி வழங்கினார். மேலும் … Read more

ராணுவத்தின் தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றார்

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம். நரவனேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக இதற்கு முன்பு துணை தலைமை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றார். தொடர்ந்து, ராணுவத்தின் புதிய துணை தலைமைத் தளபதியாக பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா். இவரும் இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து, ஓய்வுப் பெற்ற ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே மற்றும் அவரது மனைவி வீணா நரவனே ஆகியோர் குடியரசுத் தலைவர் … Read more

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக பொறுப்பேற்றார் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே

டெல்லி: இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே 1982-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியை முடித்தவர். இந்திய ராணுவ பிரிவு, லடாக், பாகிஸ்தான் எல்லை, அந்தமான்-நிகோபார் பிராந்தியத்திலும் பணியாற்றியுள்ளார்.

ஈரானில் இருந்து வந்த கன்டெய்னரில் திரவ வடிவில் 90 கிலோ ஹெராயின் கடத்தல்: குஜராத்தில் அடுத்தடுத்து சிக்குவதால் பரபரப்பு

அகமதாபாத்: ஈரானில் இருந்து குஜராத் வந்த கன்டெய்னரை அதிகாரிகள் சோதனை செய்ததில், அதற்குள் திரவ வடிவில் 90 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டது. குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பிபாவாவ் துறைமுகத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக குஜராத் சிறப்பு புலனாய்வு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கு உரிய கன்டெய்னரில் சுமார் 90 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.450 கோடி … Read more

மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில்: வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள வில்லோ ஸ்பா என்ற மசாஜ் நிலையத்தில்  பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் அதிரடி சோதனை  நடத்தினர். இதில் உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று … Read more

கொரோனா தாக்கத்திலிருந்து மீள 13 ஆண்டுகள் ஆகும் – ரிசர்வ் வங்கி தகவல்

கொரோனா பரவலால் ஏற்பட்ட கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து மீள இந்தியாவுக்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய கரன்சி மற்றும் நிதி தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் மைனஸ் 6.6 சதவிகிதம் என பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்ததை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2023-ம் ஆண்டுக்கு பிறகு பொருளாதாரம் வருடத்திற்கு 7.5 சதவிகிதம் வளர்ச்சியடையும் என வைத்துக் கொண்டால் கூட கொரோனா காலத்தில் சந்தித்த … Read more