காதி விற்று முதலில் சாதனை| Dinamalar

புதுடில்லி : காதி கிராமோத்யோக் ஆணையத்தின் விற்றுமுதல் கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் 20.54 சதவீதம் உயர்ந்து, 1.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது குறித்து குறு, சிறு, நடுத்தர துறை நிறுவன அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமர் மோடியின் தொடர் ஆதரவு காரணமாக கடந்த நிதியாண்டில் காதி கிராமோத்யோக் ஆணையத்தின் விற்றுமுதல் முதன் முறையாக, 1.15 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது, வேறு எந்த நுகர்பொருள் நிறுவனத்தின் விற்றுமுதலை விட அதிகம். நாட்டில் காதிகிராமோத்யோக் ஆணையம் மட்டுமே, இந்த அளவிற்கு விற்றுமுதலை அடைந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.