தாயார் வீட்டிற்குள் அனுமதிக்காததால் சின்னத்திரை நடிகர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி.!

வீட்டிற்குள் தாயார் அனுமதிக்காததால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்..

ஆர்.ஏ புரம் பகுதியை சேர்ந்த ஜெரால்டு பெர்னான்டோ என்பவர் சின்னத்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். சில காலமாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால் காவலாளியாக வேலை பார்ந்து வருகிறார்.

அவரை அவரது தாயார் வீட்டிற்குள் அனுமதிக்காததால் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் 4 முறை புகார் அளித்தார். காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் ஜெரால்டு பெர்னான்டோவை அவரது தாயார் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.