மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசு ஏற்ற நிலையில் அவர் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதி.!

இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாமல் தவிக்கும் மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்ற நிலையில், அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபால் வீராங்கனையான சிந்து, கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டின் 3ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரு கால் எலும்புகளும் முறிந்தன. எழுந்து நிற்க முடியாத நிலையிலும் மாணவி சிந்து, தன்னம்பிக்கையுடன் பொதுத் தேர்வு எழுதினார்.

சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் அறிவித்த நிலையில், மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு துறையைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள், மாணவிக்கு வழங்கவேண்டிய சிகிச்சைகள் குறித்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.