மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் ; இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 5 லட்ச ரூபாய் அபராதம்

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் விதிமுறைகளை பின்பற்ற தவறியதாக இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 7ஆம் தேதி ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் செல்ல தங்களது மாற்றுத்திறனாளி மகனுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற்ற இண்டிகோ நிறுவன ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களை விமானத்தில் ஏற்ற முடியவில்லை என அந்நிறுவனம் விளக்கமளித்திருந்தது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.