இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப தமிழக அரசு தீவிரம் – முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய முடிவு

சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் எல்லா பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. பெட்ரோல், டீசல் கிடைக்காததால் வாகனங்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மண்எண்ணெய் வாங்க பொதுமக்கள் 6 மணி நேரம் காத்திருக்கின்றனர். சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர். நிலக்கரி தட்டுப்பாட்டால் இலங்கையில் 8 மணி நேரத்திற்கும் மேல் … Read more

இந்துக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக சதி: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

மும்பை : மராட்டியத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா, தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கூட்டணியை முறித்து கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்த்து ஆட்சியமைத்தது.   அந்த நாள் முதல் சிவசேனாவுக்கு பா.ஜனதா நேரடியாகவும், மறைமுகமாகவும் குடைச்சலை கொடுத்து வருகிறது. சிவசேனா இந்துத்வா கொள்கையில் இருந்து விலகி செயல்படுவதாக கூறி, அந்த கருத்தை இந்து வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்துக்களிடையே … Read more

தரையிறங்கும்போது குலுங்கிய விமானம்- 13 பேர் காயம்

துர்காபூர்: நேற்று மாலை மும்பையில் இருந்து மேற்குவங்கம் துர்காப்பூர் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கும் நிலையில் இருந்தபோது திடீரென குலுங்கியது.  இதனால் ஏற்பட்ட பாதிப்பில் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து துர்காப்பூர் விமான நிலையத்தில் மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விமானம் நடுவானில் இருந்தபோது மோசமான வானிலை காரணமாக காற்றில் ஏற்பட்ட மாற்றத்தால் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தின் கேபினில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் பொருட்கள் அவர்களின் தலையிலேயே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 405 புள்ளிகள் சரிந்து 56,655 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 405 புள்ளிகள் சரிந்து 56,655 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 132 புள்ளிகள் சரிந்து 16,969 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பூசி கட்டாயம் என பல்வேறு மாநில அரசுகள் விதித்த அரசாணைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சில நிபந்தனைகளை உருவாக்கி அதன் கொள்கைகளை வகுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

வெறிநாய் கடித்த நிலையில் சாலையில் செல்வோரை விரட்டி விரட்டிக் கடித்த பசுமாடு

அறந்தாங்கி அருகே பெருங்காட்டில் 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த வெறிபிடித்து பசுவை, கிராம இளைஞர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்காடு கிராமத்தில் உள்ள பசுமாட்டை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. இந்நிலையில், அந்த பசுமாடு வெறிபிடித்து சாலைகளில் செல்வோரை துரத்தி துரத்தி முட்டுவதும், கடிப்பதுமாக இருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் கிராம மக்கள், வெறிபிடித்து திரிந்த … Read more

வாக்குவாதத்தால் ஆத்திரம் – கல்லூரி மாணவர் மீது காரை ஏற்றி சென்ற இளைஞர்கள்! வீடியோ வைரல்

சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மீது இளைஞர்கள் சிலர் காரை ஏற்றிச் சென்ற சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேர், ஹோட்டலுக்கு சென்றுவிட்டு நள்ளிரவு 1.30 மணியளவில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேறு சில இளைஞர்கள் ஓட்டி வந்த கார், கல்லூரி மாணவர்களின் கார் மீது லேசாக உரசியுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் … Read more

“'இரவின் நிழல்' படத்தை அமெரிக்காவில் எடுத்தால் உலகமே பாராட்டியிருக்கும்”- ஏ.ஆர்.ரஹ்மான்

‘இரவின் நிழல்’ படத்தை யூரோ மற்றும் அமெரிக்காவில் எடுத்திருந்தால்  உலகமே பாராட்டி இருக்கும்; தமிழ்நாட்டில் எடுத்திருக்கிறோம் பார்ப்போம்’ என ஏ.ஆர்.ரஹ்மான்  தெரிவித்தார் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியின் அரங்கத்தில் இயக்குநர் பார்த்திபன் இயக்கி மற்றும்  கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள ‘இரவின் நிழல்’  திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடகி ஷ்ரேயா கோஷல் குரலில் உருவாகியுள்ள  ‘மாயவா சாயவா’  எனும் பாடலை  இயக்குநர் பார்த்திபன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் திரைப் … Read more

ரஷ்யாவில் இருந்து குவியும் ஆர்டர்கள்.. வியப்பில் இந்தியர்கள்..!

ஒருபக்கம் உக்ரைன் – ரஷ்யா போர் 3ஆம் மாதத்திற்குள் நுழையும் வேளையில், இந்தியாவுக்கு ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இது இந்தியாவுக்கு அதிகப்படியான வருமானத்தை அளிப்பது மட்டும் அல்லாமல் ரஷ்யா – இந்தியா இடையேயான வர்த்தக நட்புறவு வலிமை அடைய உள்ளது. போருக்கு பின்பு ரஷ்யா அதிகப்படியான பொருட்களை இந்தியாவிடம் இருந்து வாங்க துவங்கியது. தற்போது இதன் எண்ணிக்கையும், அளவும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ரஷ்யா நிறுவனங்கள் ரஷ்யா நிறுவனங்கள் சுமார் 50க்கும் … Read more