டில்லி அமைச்சரை 9 வரை காவலில் விசாரிக்க உத்தரவு| Dinamalar

புதுடில்லி : பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை 9ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மோசடி வழக்கு பதிவு



டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.இவரது அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் சத்யேந்திர ஜெயின் மீது 2015ல் அமலாக்கத்துறை பணப்பரிமாற்ற மோசடி வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சத்யேந்திர ஜெயினின் குடும்பத்தினருக்கு சொந்தமான 4.81 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே பறிமுதல் செய்துள்ளது.

14 நாள் காவல்

இந்நிலையில், அமைச்சர் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். டில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன் அவர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:இந்த பணப்பரிமாற்ற மோசடியில் பல்வேறு அடுக்குகள் உள்ளன. வேறு நபர்களின் பணத்தை இவர் கையாண்டு உள்ளாரா, இதனால் பலன் அடைந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. எனவே, குற்றவாளியை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், வரும் 9ம் தேதி வரை சத்யேந்திர ஜெயினை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.