செருப்பால் சிக்கிய கொள்ளையர்கள்.. தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது.. 32 சவரன் நகை பறிமுதல்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை அவர்கள் அணிந்த செருப்பை அடையாளமாக வைத்து போலீசார் கைது செய்தனர்.

சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டுகள் அரங்கேறி வருவதாக வந்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஒரே கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனிடையே, முத்துக்கவுண்டன் புதூர் அருகே வாகன தணிக்கையின் போது அவ்வழியாக வந்த 3 பேர், போலீசாரை கண்டு தப்பியோடிய நிலையில் மடக்கி பிடித்து விசாரித்த போது கொள்ளை தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பது அவர்கள் அணிந்திருந்த செருப்பை வைத்து போலீசார் உறுதி செய்தனர்.

3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 32 சவரன் நகை, மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.