கேரளாவில் மகன் மற்றும் மகளை ஆற்றில் வீசி கொன்று விட்டு தந்தையும் தற்கொலை.!

கேரள மாநிலம் அலுவாவில் மகன் மற்றும் மகளை ஆற்றில் வீசி கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மணப்புரம் ஆற்று பாலத்திற்கு தன் இரு பிள்ளைகளுடன் வந்த நபர், ஒருவர் பின் ஒருவராக இரு குழந்தைகளையும் ஆற்றில் வீசிவிட்டு தானும் குதித்தார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மூன்று மணி நேர தேடுதலுக்கு பின் அந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் பாலேரிவட்டத்தை சேர்ந்த கூழித் தொழிலாளி ஹரிஹரன் என தெரிவித்த போலீசார், எதற்காக இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார் என விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.