நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது? – உயர்நீதிமன்றம்

நீலகிரி மாவட்டத்தில், விற்பனை செய்யப்படும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்த கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டிலை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமலாகியுள்ளதாகவும், தினசரி 80 ஆயிரம் காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறுவதாகவும் ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, இத்திட்டத்தை அனைத்து வனப்பகுதிகள், மலைவாசஸ்தலங்களில் ஏன் அமல்படுத்தக் கூடாது? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.