வடகிழக்கு மாநிலங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை| Dinamalar

மேகாலயா : வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், அசாம்,
மேகாலயாவில் கடந்த மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட
பேரிடர்களில் சிக்கி இந்த மாநிலங்களில் 43 பேர் பலியாகினர். அசாமில்
மட்டும் 27 பேர் பலியாகி உள்ளனர்.

மேகாலயாவின் தெற்கு காரோ மலையின் குறுக்கே
ஓடும் புகி ஆற்றின் மேல் உள்ள மிகப் பெரிய பாலம், வெள்ளத்தில் அடித்து
செல்லப்பட்டது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காரோ மலைப்பகுதியை
மேகாலயா முதல்வர் கான்ராட் சர்மா நேற்று நேரில் பார்வையிட்டார்.
இதற்கிடையே, அருணாசல பிரதேசம், அசாம், மேகாலயா மாநிலங்களில், அடுத்த இரண்டு
நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால், வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்
‘எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.