பணவீக்கம், விலைவாசி உயர்வால் கடும் பாதிப்பு எனச் சிங்கப்பூர் மக்கள் கருத்து..!

பணவீக்கமும் விலைவாசி உயர்வும் தங்கள் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகச் சிங்கப்பூர் மக்களில் பத்தில் ஒன்பது பேர் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் பணவீக்கம், அதைக் கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கை குறித்து பிளாக்பாக்ஸ் என்னும் நிறுவனம் 758 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது.

விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் அரசு மோசமாகச் செயல்படுவதாகவும் 55 விழுக்காட்டினரும், சிறப்பாகச் செயல்படுவதாக 37 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா சூழலுக்குப் பின் உடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு ஆகியவற்றுக்குக் குறைவாகச் செலவிடுவதாகப் பத்தில் ஒன்பது பேர் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு குறித்து 35 விழுக்காட்டினரும், வீட்டு விலை உயர்வு குறித்து 66 விழுக்காட்டினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.