டிராக்டரை முந்தி செல்ல முயன்ற போது சக்கரத்தில் சிக்கி தாய், மகள் சம்பவ இடத்திலேயே பலி.!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் நிலைதடுமாறி விழுந்த போது, டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நரிக்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் மொடக்குறிச்சியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி மற்றும் 4 வயது மகள் சுருதி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் மொடக்குறிச்சியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

பட்டறை வேலம்பாளையம் அருகே கரும்பு லோடு ஏற்றிச் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே இருசக்கர வாகனம் வந்ததால் நிலைதடுமாறி விழுந்தனர். அப்போது டிராக்டர் சக்கரம் ஏறியதில் இருவரும் உயிரிழந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.