நாகை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்த விசாரணை கைதி

நாகை மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த நபர் உடல்நலம் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெண் அளித்த புகாரில் 4 பேர் மீது திட்டச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து மூன்று நபர்கள் தப்பி ஓடிய நிலையில் சிவசுப்பிரமணியனை கைதுசெய்தனர்.
image
இதையடுத்து நாகை நீதிமன்றத்தில் அவர், ஆஜர்படுத்த பட்ட நிலையில் அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசுப்பிரமணியனுக்கு கடந்த 10ஆம் தேதி திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது.
இந்நிலையில், நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைக்காவலர்கள் சிவசுப்பிரமணியத்தை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
image
இதுகுறித்து மாவட்ட சிறை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.