ஓங்கி அடிச்சா ஒன்றடன் வெயிட்ரா.. பாக்குறியா… பாருடா…! சண்டையில கிழியாத சட்டையில்ல குமாரு..!

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது ரெயில் நிலையத்துக்குள் நுழையவிடாமல் தடுத்த ஆயுதப்படை ஏட்டுவை, மாவட்ட செயலாளர் , கன்னத்தில் பளார் என்று அறைந்த காட்சிகள் வெளியாகி உள்ளது…

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்று ரெயில் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களை ரெயில் நிலையத்துக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்திய போது இரு தரப்புக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தோழர்கள் போலீசாரின் தடையை மீறி உள்ளே ஓடிச்சென்றனர். அப்போது புற நகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரனின் சட்டையை ஆயுதப்படை தலைமை காவலர் மணிராஜ் என்பவர் பிடித்து இழுத்தபோது அது கிழிந்ததாக கூறப்படுகின்றது. சட்டை கிழிக்கப்பட்டதால் ஆத்திரத்தில் ,அவர் தலைமை காவலரின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.