தமிழகத்தில் ஜூலை 11-ம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருநெல்வேலியில் உள்ள காந்தி அம்மன் கோவில் தேரோட்ட விழா நடைபெற உள்ளது. இந்த தலத்தில் உள்ள தேரானது தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைகுரியது.

இந்த தேர்த்திருவிழா வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த விடுமுறை நாளில் பள்ளி மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு எதுவும் இருந்தால் அவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும். இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.